இரட்டை இலை சின்னம் 100% எங்களுக்கே கிடைக்கும்: அமைச்சர் ஜெயக்குமார் உறுதி!

அதிமுகவின் இரட்டை இலை சின்னம் 100% எங்களுக்கே கிடைக்கும் என்று தமிழக அமைச்சர் ஜெயக்குமார் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
இரட்டை இலை சின்னம் 100% எங்களுக்கே கிடைக்கும்: அமைச்சர் ஜெயக்குமார் உறுதி!

சென்னை: அதிமுகவின் இரட்டை இலை சின்னம் 100% எங்களுக்கே கிடைக்கும் என்று தமிழக அமைச்சர் ஜெயக்குமார் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

அதிமுகவில் நிகழ்ந்துள்ள இபிஎஸ் - ஒபிஎஸ் அணிகள் சேர்க்கைக்குப் பிறகு அக்கட்சியின் அவசரப் பொதுக்குழு கூட்டம் கூட்டப்பட்டது. அந்த கூட்டத்தில் சசிகலா மற்றும் தினகரன் நியமனங்கள் செல்லாது என்றும்,அவர்கள் இருவரையும் கட்சியிலிருந்து நீக்கியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்நிலையில் அதிமுகவின் மூத்த அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம் மற்றும் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் இன்று தில்லி சென்றனர். அங்கு தேர்தல் ஆணைய அலுவலகத்தில் கட்சியின் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து எடுத்துரைத்தனர்.

அத்துடன் முடக்கப்பட்ட கட்சியின் பெயர் மற்றும் சின்னம் இரண்டும் ஒருங்கிணைந்த அணியான தங்களுக்கே ஒதுக்கப்பட வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்தனர்.

பின்னர் மாலை அவர்கள் சென்னை திரும்பினார். அப்பொழுது சென்னை விமான நிலையத்தில் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம், 'அதிமுகவின் இரட்டை இலை சின்னமானது ஒன்றிணைந்த அணியான எங்களுக்கு 100% உறுதியாக கிடைக்கும்' என்று தெரிவித்தார்.

அதேபோல அமைச்சர் சி.வி.சண்முகம் பேசும் பொழுது, 'உள்ளாட்சி தேர்தலை நடத்த அதிமுக தயாராக இருந்ததாகவும், திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தொடர்ந்த வழக்கின் காரணமாகத்தான் நீதிமன்றம் தடை விதித்தது' என்று தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com