ஆபாசமின்றி நடன நிகழ்ச்சி நடத்த அனுமதி அளித்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக ராம்குமார் என்பவர் தொடர்ந்த பொதுநல வழக்கில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் கூறியதாவது, குலசேகரப்பட்டினம் தசரா விழாவில் ஆபாசமின்றி நடன நிகழ்ச்சிகளை நடத்தலாம். கோவில்களில் நடைபெறும் கலாசார, கலை நிகழ்ச்சிகளில் நீதிமன்றம் தலையிட முடியாது.
இருப்பினும், கலை என்ற பெயரில் ஆபாச நடனம் நடப்பதை ஏற்க முடியாது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.