சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதாவை நான் உள்பட அனைத்து அமைச்சர்களும் பார்த்ததாக அமைச்சர் செல்லூர் ராஜூ கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறுகையில், சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதாவை நான் உள்பட அனைத்து அமைச்சர்களும் பார்த்ததாக அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.
ஜெயலலிதாவை யாரும் பார்க்கவில்லை என சில அமைச்சர்கள் கூறியிருந்த நிலையில், தான் உள்பட உள்பட அனைத்து அமைச்சர்களும் பார்த்ததாக செல்லூர் ராஜு கூறியிருப்பது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஜெயலலிதா மருத்துவமனையில் இட்லி, சட்னி சாப்பிட்டார் என பொய் கூறியதாக திண்டுக்கல் சீனிவாசன் சில தினங்களுக்கு முன்பு திண்டுக்கல்லில் நடைபெற்ற கட்சியின் கூட்டத்தில் மன்னிப்பு கோரியது குறிப்பிடத்தக்கது.