டெங்கு காய்ச்சலுக்கு பள்ளி மாணவர் பலி

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பள்ளி மாணவர் சிகிச்சை பலனளிக்காமல் சனிக்கிழமை உயிரிழந்தார்.
டெங்கு காய்ச்சலுக்கு பள்ளி மாணவர் பலி

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பள்ளி மாணவர் சிகிச்சை பலனளிக்காமல் சனிக்கிழமை உயிரிழந்தார்.
ஆயிரம்விளக்கு பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷ் பாபுவின் மகன் பார்கவ் (9)(படம்). சென்னை கோபாலபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் 4-ஆம் வகுப்பு மாணவர். சில நாள்களுக்கு முன்பு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பார்கவ் சென்னை சேத்துப்பட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில் மாணவருக்கு டெங்கு இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து மேல் சிகிச்சைக்காக பார்கவ் கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 
உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால் நுங்கம்பாக்கத்தில் உள்ள குழந்தைகள் மருத்துவமனையில் சனிக்கிழமை அனுமதிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே பார்கவ் உயிரிழந்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com