புதுச்சேரி தலைமை செயலகத்தில் முதல்வர் நாராயணசாமி இன்று திடீரென ஆய்வு மேற்கொண்டார்.
அதிகாரிகள், ஊழியர்கள் பணிக்கு தாமதமாக வருவதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து அவர் ஆய்வு நடத்தினார்.
மேலும் இந்த ஆய்வின் போது அலுவலக நேரத்துக்கு பணிக்கு வராத ஊழியர்கள் விளக்கமளிக்கவும் முதல்வர் நாராயணசாமி உத்தரவிட்டுள்ளார்.