பேராசிரியை நிர்மலா தேவி மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்வோரை என்கவுண்டர் செய்ய வேண்டும். பேராசிரியை நிர்மலா தேவி மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
மாணவிகளிடம் பேராசிரியை நிர்மலா தேவி பேசிய ஆடியோவை நானும் கேட்டேன். அமைச்சர் பொறுப்பிலிருக்கும் பொன்.ராதாகிருஷ்ணன் பொறுப்புடன் பேச வேண்டும். தெருவில் செல்பவர்போல் பேசக்கூடாது.
அதிகாரி போல் இல்லாமல் அரசியல்வாதியாகத்தான் ராமமோகனராவ் செயல்பட்டார். ஜெயலலிதா சிகிச்சை விவகாரத்தில் ராமமோகனராவை கைது செய்து விசாரிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.