அண்ணா உயிரியல் பூங்காவுக்கு புதிய செல்லிடப்பேசி செயலி அறிமுகம்

வண்டலூர் அண்ணா உயிரியல் பூங்கா தொடர்பாக பல்வேறு தகவல்களை அறிந்துகொள்ளும் வகையிலான செல்லிடப்பேசி செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அண்ணா உயிரியல் பூங்காவுக்கு புதிய செல்லிடப்பேசி செயலி அறிமுகம்

வண்டலூர் அண்ணா உயிரியல் பூங்கா தொடர்பாக பல்வேறு தகவல்களை அறிந்துகொள்ளும் வகையிலான செல்லிடப்பேசி செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா 602 ஹெக்டேர் பரப்பளவில் அறிவியல்பூர்வமாக புதிய வடிவமைப்புடன் செயல்பட்டு வருகிறது. இதில் 2,300 உள்நாட்டு, வெளிநாட்டு விலங்கினங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. பூங்காவுக்கு ஆண்டுதோறும் 20 லட்சம் பேர் பார்வையாளர்களாக வந்து செல்கின்றனர். இந்நிலையில், பார்வையாளர்களின் வசதிக்காக யஹய்க்ஹப்ன்ழ் ழர்ர் என்ற பெயரில் ஆன்ட்ராய்டு செல்லிடப்பேசிகளுக்கான செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இச்செயலி மூலம் பூங்கா நுழைவுக்கான டிக்கெட் பதிவு செய்யலாம். பூங்கா தொடர்பான பல்வேறு தகவல்களையும் பெறமுடியும்.
தற்போது இந்த வசதி ஆன்ட்ராய்டு செல்லிடப்பேசியில் Vandalur Zoo' -இல் சென்று பதிவிறக்கம் செய்யலாம். மிக விரைவில் அல்ல்ப்ங் டட்ர்ய்ங் -ல் பயன்படுத்தும் வகையிலான செயலியும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது என பூங்கா நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com