பழனி மலைக் கோயில் உண்டியல் காணிக்கை 21 நாளில் ரூ. 2 கோடியைத் தாண்டியது

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் பங்குனி உத்தரத் திருவிழாவையொட்டி உண்டியல்கள் கடந்த 21 நாள்களில் நிறைந்ததையடுத்து திங்கள்கிழமை திறந்து எண்ணப்பட்டன. 
உண்டியல் திறப்பின் போது காணிக்கையாக வரப்பெற்ற தங்கம் மற்றும் வெள்ளிப் பொருள்கள்.
உண்டியல் திறப்பின் போது காணிக்கையாக வரப்பெற்ற தங்கம் மற்றும் வெள்ளிப் பொருள்கள்.

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் பங்குனி உத்தரத் திருவிழாவையொட்டி உண்டியல்கள் கடந்த 21 நாள்களில் நிறைந்ததையடுத்து திங்கள்கிழமை திறந்து எண்ணப்பட்டன. 
இதில் முதல் நாள் எண்ணிக்கையில் காணிக்கை வரவு ரூ.2 கோடி கோடியை தாண்டியது. செவ்வாய்க்கிழமையும் உண்டியல் எண்ணிக்கைத் தொடர்கிறது. இந்த உண்டியல் எண்ணிக்கையின் போது பக்தர்கள் காணிக்கை வரவு ரொக்கம் ரூ.2 கோடியே 7 லட்சத்து 24 ஆயிரத்து 498 கிடைத்தது.
உண்டியலில் தங்கத்தாலான வேல், பட்டை, தாலி, மோதிரம், சங்கிலி, தங்கக்காசு போன்றவற்றையும் வெள்ளியால் ஆன பிஸ்கட், காசுகள், சிறிய வீடு, தொட்டில், வேல், கொலுசு, பாதம் போன்றவற்றையும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். தங்கம் 1,015 கிராமும், வெள்ளி 9,370 கிராமும் இருந்தது. மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாட்டு கரன்சிகள் 229-ம் கிடைத்தன.
இவை தவிர பித்தளை வேல், கைக்கடிகாரம், ஏலக்காய், முந்திரி, நவதானியங்கள், பட்டாடைகளும் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தன. இந்த உண்டியல் எண்ணிக்கையில் 500-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர். 
அப்போது பழனிக்கோயில் இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் (பொறுப்பு) செந்தில்குமார், திண்டுக்கல் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சிவலிங்கம், கண்காணிப்பாளர் முரளி, மேலாளர் உமா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.செவ்வாய்க்கிழமையும் (ஏப். 17) உண்டியல் எண்ணிக்கை தொடர்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com