பேராசிரியை நிர்மலா தேவியின் 3 மொபைல் போன்களை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அருப்புக்கோட்டையில் கல்லூரி மாணவிகள் 4 பேரை தவறாக வழிநடத்த முயன்ற கல்லூரி உதவிப் பேராசிரியை திங்கள்கிழமை கைது செய்யப்பட்டார். இச்சம்பவம் தமிழகத்தில் கடும் அதிர்ச்சியையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே கைதான பேராசிரியை நிர்மலா தேவியிடம் போலீசார் 2ஆவது நாளாக இன்றும் விசாரணை நடத்தினர். மேலும் அவரின் 3 மொபைல் போன்களையும் போலீசார் அப்போது பறிமுதல் செய்தனர். இந்த விசாரணை முழுவதும் வீடியோ பதிவு செய்யப்படுகிறது.