மெரீனாவில் போராட அனுமதிக்க வேண்டும்: தி.வேல்முருகன்

காவிரி பிரச்னைக்காக மெரீனா கடற்கரையில் போராட்டம் நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன் வேண்டுகோள் விடுத்தார்.

காவிரி பிரச்னைக்காக மெரீனா கடற்கரையில் போராட்டம் நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன் வேண்டுகோள் விடுத்தார்.
இதுதொடர்பாக அவர், சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியது:
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் மத்திய அரசு தமிழகத்தை வஞ்சித்து வருவதால், பிரதமர் நரேந்திர மோடி சென்னை வந்தபோது கருப்புக்கொடி காட்டினோம். 
தமிழகத்தில் ஐபிஎல் போட்டியை நடத்தவிடாமல் போராடிய அனைவருக்கும் நன்றி.
மத்திய அரசு காவிரி பிரச்னையில் இன்னும் ஒரு தெளிவான முடிவை எடுக்காமல் உள்ளது. மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை எங்களின் போராட்டம் தொடரும். இதற்காக மெரீனா கடற்கரையில் போராட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளோம். இதற்கு அனுமதி கேட்டு காவல்துறை ஆணையரைச் சந்தித்து மனு அளிக்க உள்ளோம். மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து காவிரி பிரச்னைக்காக மெரீனாவில் போராட அனுமதி அளிக்க வேண்டும் என்றார் வேல்முருகன்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com