தமிழக ஆளுநருக்கு ஆதரவாக வரிந்து கட்டும் இதர மாநில பத்திரிகையாளர் சங்கங்கள்

கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம் மற்றும் செய்தியாளர் சந்திப்பின் போது கடும் விமரிசனங்களுக்கு உள்ளான தமிழக ஆளுநர் பன்வாரிலாலுக்கு ஆதரவாக பத்திரிகையாளர் சங்கங்கள் அணி திரண்டுள்ளன.
தமிழக ஆளுநருக்கு ஆதரவாக வரிந்து கட்டும் இதர மாநில பத்திரிகையாளர் சங்கங்கள்


கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம் மற்றும் செய்தியாளர் சந்திப்பின் போது கடும் விமரிசனங்களுக்கு உள்ளான தமிழக ஆளுநர் பன்வாரிலாலுக்கு ஆதரவாக பத்திரிகையாளர் சங்கங்கள் அணி திரண்டுள்ளன.

பன்வாரிலால் பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயல்வோருக்கு மகாராஷ்டிரா உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம், நாக்பூர் உழைக்கும் பத்திரிகையாளர் சங்கங்கள் கண்டனம் தெரிவித்துள்ளன.

மேலும் இது தொடர்பாக வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில், ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில், ஆதாரம் இல்லாத, தீய நோக்கத்துடன் கூறப்படும் குற்றச்சாட்டுகளை வன்மையாகக் கண்டிக்கிறோம். பாபுஜி என்று மரியாதையோடு அழைக்கப்படும் பன்வாரிலால் புரோகித்தை நாங்கள் நன்கு அறிவோம்.

சிறந்த மக்கள் பிரதிநிதி, சிறந்த கொள்கையாளர், அப்பழுக்கற்ற, நேர்மைக்கு சொந்தக்காரர். ஆங்கில நாளிதழின் நிர்வாக ஆசிரியராக, கல்வி நிறுவனங்களின் நிர்வாகியாக பல ஆண்டு காலம் பணியாற்றி வந்த அனுபவம் பெற்றவர்.

அநீதிக்கு எதிராக குரல் கொடுத்து வருபவர். பல்வேறு சம்பவங்களின் போது பத்திரிகையாளர்களுக்காக குரல் கொடுத்தவர். ராஜ்பவனில் நடந்த செய்தியாளர் சந்திப்பின்போது தவறான கண்ணோட்டத்தில் சித்தரிக்கப்பட்ட ஒரு சம்பவம், வாழ்நாள் முழுவதும் பொது வாழ்க்கையில் நற்பெயருடன் செயல்பட்டு வருவோரை, இழிவுபடுத்துவதோடு, மிகக் கீழ்த்தரமான செயலும் கூட.

பன்வாரிலால் பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சிக்கும் நபர்களுக்கு மீண்டும் எங்களது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்று அந்த நீண்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com