சென்னை: லோக் ஆயுக்தா சட்டம் பற்றி பேசிய திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலினை, பாமக நிறுவனர் ராமதாஸ் கிண்டலிடித்துள்ளார்.
திமுக ஆட்சிக்கு வந்தால் உடனடியாக தமிழகத்தில் லோக் ஆயுக்தா சட்டம் கொண்டு வரப்படும் என்று திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியிருந்தார்.
இது குறித்து அவர் கூறியதாவது, தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் லோக் அயுக்தா சட்டம் கொண்டுவரப்படும்.
லோக் ஆயுக்தா சட்டத்தைக் கொண்டு வந்த தமிழகத்தில் தற்போது ஆட்சியில் உள்ள 90% அமைச்சர்களை சிறையில் அடைப்போம் என்று மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார்.
இது குறித்து டிவிட்டர் பக்கத்தில் கருத்துக் கூறியிருக்கும் ராமதாஸ், அய்யோ பாவம்... பதவியில் உள்ள அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு மட்டும் தான் லோக் அயுக்தா என்பது செயல் தலைவருக்கு தெரியாதோ? என்று பதிவிட்டுள்ளார்.
பதிவிட்டதோடு, லோக் ஆயுக்தா சட்டம் குறித்த அரசாணையின் புகைப்படத்தையும் இணைத்துள்ளார்.