சென்னைப் பல்கலைக்கழக 160-ஆவது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் மே 5-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பங்கேற்க உள்ளார்.
இது தொடர்பாக பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்தி: பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று பட்டம் பெற பிஎச்.டி. (ஆராய்ச்சி படிப்பு) முடித்த மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க ஏப்.27 கடைசி நாளாகும்.
விண்ணப்பத்தை ஆன்-லைனில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் அல்லது பல்கலைக்கழக விசாரணை மையத்தில் ரூ. 25 கட்டணம் செலுத்திப் பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடியரசுத் தலைவர் பங்கேற்பு: மே 5-ஆம் தேதி காலை 10.30 மணிக்கு நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பங்கேற்க சம்மதம் தெரிவித்துள்ளதாக பல்கலைக்கழகத் துணைவேந்தர் துரைசாமி தெரிவித்துள்ளார்.