சென்னை: சென்னை புழல் மத்திய சிறையில் விசாரணைக் கைதி சக்திவேல் என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
சென்னைக்கு அருகில் உள்ள திருவள்ளூவர் மாவட்டத்தினைச் சேர்ந்தவர் சக்திவேல். இவர் வழிப்பறியில் ஈடுபட்டதாகக் கைது செய்யப்பட்டு, புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் வெள்ளியன்று சிறையில் உள்ள கழிவறையில் உள்ள ஜன்னலில் சக்திவேல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
உடனடியாக அவரது உடல் கைப்பற்றப்பட்டு மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சிறை நிர்வாகம் விசாரணையில் ஈடுபட்டுள்ளது