தமிழக அரசு, தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம், இந்திய தொழில் வா்த்தகக் கூட்டமைப்பு ஆகியவை இணைந்து சென்னையில் நேற்று (செவ்வாய்க்கிழமை ) சாலை பாதுகாப்பு உறுதிமொழியேற்பு நிகழ்ச்சியொன்றை நடத்தியது.
இதில் சாலை பாதுகாப்பில் சிறப்பாக செயல்பட்ட விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.ஜெயக்குமாா், சேலம் துணை காவல் ஆணையா் பி.தங்கதுரை, சென்னை ராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனை முதல்வா் ஆா். ஜெயந்தி ஆகியோருக்கு விருதுகளை வழங்கப்பட்டது. மாநில நெடுஞ்சாலைத் துறை கூடுதல் தலைமைச் செயலா் ராஜீவ் ரஞ்சன், இந்திய தொழில் வா்த்தகக் கூட்டமைப்பு நிா்வாகிகள் ரூபன்ஹோப்தே, ஆா்.எம்.அருண், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் வா்த்தகப் பிரிவு மூத்த துணைத் தலைவா் ஜே.விக்னேஷ் குமாா், மாருதி சுசுகி மண்டல மேலாளா் சபரி கிரிஷ் ஆகியோர் பங்குபெற்று விழாவை சிறப்பித்தனர்.