தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னையில் வானம் பொதுவாக மேக மூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. மாலை மற்றும் இரவில் இடி, மின்னல் ஏற்படக் கூடும்.
தமிழகத்தில் ஞாயிற்றுகிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக, சென்னை மாவட்டம் டி.ஜி.பி. அலுவலகம், திருவள்ளூர் மாவட்டம் எண்ணூரில் தலா 40 மி.மீ. மழை பதிவானது. நீலகிரி மாவட்டம் தேவாலா, திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம், காஞ்சிபுரம் மாவட்டம் காட்டுப்பாக்கத்தில் தலா 30 மி.மீ. மழை பதிவானது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை: வட தமிழகம் மற்றும் புதுச்சேரியின் கடலோரப் பகுதிகளில் தென் மேற்கு மற்றும் மேற்கு திசையில் இருந்தும் தென் தமிழக கடலோரப் பகுதிகளில் தென் மேற்கு திசையில் இருந்தும் பலத்த காற்று வீசக்கூடும். எனவே மீனவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.