மழைநீர் சேகரிப்பு தொட்டி இல்லாத கட்டடங்களுக்கு அபராதம் விதிக்கலாமா?: உயர் நீதிமன்ற நீதிபதிகள் 

மழைநீர் சேகரிப்பு தொட்டி இல்லாத கட்டடங்களுக்கு அபராதம் விதிக்கலாமா? என உயர் நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மழைநீர் சேகரிப்பு தொட்டி இல்லாத கட்டடங்களுக்கு அபராதம் விதிக்கலாமா?: உயர் நீதிமன்ற நீதிபதிகள் 

மழைநீர் சேகரிப்பு தொட்டி இல்லாத கட்டடங்களுக்கு அபராதம் விதிக்கலாமா? என்பது குறித்து அரசு பரிசீலித்து முடிவெடுக்க உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

மழைநீர் சேகரிப்பு திட்டத்தை கட்டாயமாக்கி 2013ம் ஆண்டு தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் மழைநீர் சேமிப்பு வசதியில்லாத கட்டடங்களுக்கு அனுமதி வழங்கக்கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதுதொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. 

அப்போது மழைநீர் சேகரிப்பு தொட்டி இல்லாத கட்டடங்களுக்கு அபராதம் விதிக்கலாமா? எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள் இதுதொடர்பாக அரசு 8 வாரத்தில் பரிசீலித்து முடிவெடுக்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com