மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்

தேசவிரோதச் செயலில் ஈடுபட்டதாக கைதான மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கைது சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.
மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்

தேசவிரோதச் செயலில் ஈடுபட்டதாக கைதான மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கைது சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சென்னையைச் சேர்ந்த திருமுருகன் காந்தி, ஜெனீவாவில் அண்மையில் நடைபெற்ற ஐ.நா.வின் மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்று பேசினார். அதில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியானது குறித்தும், சென்னை-சேலம் பசுமை வழிசாலைத் திட்டம் குறித்தும் பேசினாராம். திருமுருகன்காந்தியின் இந்தப் பேச்சு, மே 17 இயக்கத்தின் முகநூல் பக்கத்தில் விடியோ காட்சியாக வெளியிடப்பட்டிருந்தது.

இதில் திருமுருகன்காந்தி அரசுக்கு எதிராக சில கருத்துகளை கூறியிருந்தாராம். இந்நிலையில் இந்த விடியோ காட்சியைப் பார்த்த சென்னை குரோம்பேட்டை நியூ காலனியைச் சேர்ந்த க.மதன்குமார் என்பவர், சென்னை பெருநகர காவல்துறையின் சைபர் குற்றப்பிரிவில் புகார் செய்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் போலீஸார் விசாரணை செய்தனர். விசாரணையில், திருமுருகன்காந்தி அரசுக்கு எதிரான பேசியது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அரசுக்கு எதிராக பொதுமக்களிடையே பகை ஊட்டும் வகையில், தேச விரோதச் செயலில் ஈடுபட்டதாகவும், உள்நோக்கத்தோடு கலகத்தை ஏற்படுத்த திட்டமிட்டதாகவும், இரு பிரிவினரிடையே மோதலை ஏற்படுத்த முயற்சித்ததாகவும் 3 சட்டப் பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்நிலையில், ஜெனீவாவில் இருந்து திருமுருகன்காந்தி இந்தியாவுக்கு திரும்பி வரும்போது, அவரைக் கைது செய்வதற்குரிய நடவடிக்கைகளை சைபர் குற்றப் பிரிவு போலீஸார் எடுத்தனர். இதன் ஒரு பகுதியாக திருமுருகன்காந்தி, தேடப்படுவோர் பட்டியலில் இருப்பதாக நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களுக்கு சைபர் குற்றப் பிரிவு போலீஸார் நோட்டீஸ் அளித்தனர். இந்நிலையில், ஜெனீவாவில் இருந்து விமானம் மூலம் பெங்களூருக்கு வியாழக்கிழமை அதிகாலை திருமுருகன்காந்தி வந்தார். அப்போது அவர் தேடப்படுவோர் பட்டியலில் இருப்பதைப் பார்த்த குடியுரிமைத் துறை அதிகாரிகளும், சுங்கத் துறை அதிகாரிகளும் திருமுருகன் காந்தியை கைது செய்து, பெங்களூரு போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.

பெங்களூரு போலீஸார், திருமுகன்காந்தி கைது செய்யப்பட்டது குறித்து, சென்னை சைபர் குற்றப்பிரிவு போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த சைபர் குற்றப்பிரிவு போலீஸார், பெங்களூரு சென்று திருமுருகன்காந்தியை சென்னைக்கு அழைத்து வந்தனர். இதையடுத்து அவரை சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் போலீசார் இன்று ஆஜர்படுத்தினர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com