தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பான வழக்குகள் சிபிஐக்கு மாற்றம்: மதுரை கிளை நீதிமன்றம்

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பான வழக்குகளை சிபிஐக்கு மாற்றி உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பான வழக்குகள் சிபிஐக்கு மாற்றம்: மதுரை கிளை நீதிமன்றம்


மதுரை: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பான வழக்குகளை சிபிஐக்கு மாற்றி உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டத்தின் போது காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.

இது தொடர்பான வழக்கு இன்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பான அனைத்து வழக்குகளையும் சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது.

மேலும், மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த 6 பேர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட வழக்குகளை ரத்து செய்து உத்தரவிட்டது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com