கோயில்களில் சிறப்பு வழிபாடு-பொது விருந்து: முதல்வர்-அமைச்சர்கள் பங்கேற்பு

சுதந்திர தினத்தையொட்டி கோயில்களில் புதன்கிழமை நடைபெற்ற சிறப்பு வழிபாடு, பொது விருந்தில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, அமைச்சர்கள் பங்கேற்றனர்.
சுதந்திர தினத்தையொட்டி சென்னை கே.கே.நகர் சக்தி விநாயகர் கோயிலில் நடைபெற்ற பொது விருந்தில் பங்கேற்ற முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி.
சுதந்திர தினத்தையொட்டி சென்னை கே.கே.நகர் சக்தி விநாயகர் கோயிலில் நடைபெற்ற பொது விருந்தில் பங்கேற்ற முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி.

சுதந்திர தினத்தையொட்டி கோயில்களில் புதன்கிழமை நடைபெற்ற சிறப்பு வழிபாடு, பொது விருந்தில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, அமைச்சர்கள் பங்கேற்றனர்.
பேரவைத் தலைவர், முதல்வர், துணை முதல்வர்: பேரவைத் தலைவர் பி.தனபால் திருவொற்றியூர் தியாகராஜசுவாமி கோயிலிலும் , சென்னை கே.கே.நகர் சக்தி விநாயகர் கோயிலில் முதல்வர் பழனிசாமியும், திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயிலில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்தில் கலந்து கொண்டனர்.
அமைச்சர்கள் பங்கேற்பு: அடையாறு அனந்தபத்மநாப சுவாமி கோயிலில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், மயிலாப்பூர் முண்டகக்கண்ணி அம்மன் கோயிலில் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, கபாலீஸ்வரர் கோயிலில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தம்புசெட்டித் தெரு காளிகாம்பாள் கோயிலில் அமைச்சர் தங்கமணி, ராயப்பேட்டை சித்திபுத்தி விநாயகர் கோயிலில் அமைச்சர் ஜெயக்குமார், ஏகாம்பரேசுவரர் கோயிலில் அமைச்சர் கே.பி.அன்பழகன், பெசன்ட் நகர் மகாலட்சுமி கோயிலில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன், மாதவப்பெருமாள் கோயிலில் அமைச்சர் எம்.சி.சம்பத், தேனாம்பேட்டை பாலசுப்பிரமணியசுவாமி கோயிலில் அமைச்சர் ஆர்.காமராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com