கேரள வெள்ளம்: 11 ரயில்கள் ரத்து

கேரளத்தில் வெள்ளப்பெருக்கு காரணமாக, சென்னையில் இருந்து திருவனந்தபுரம், மங்களூருக்கு இயக்கப்படும் ரயில்கள் வியாழக்கிழமை ரத்து செய்யப்பட்டன.


கேரளத்தில் வெள்ளப்பெருக்கு காரணமாக, சென்னையில் இருந்து திருவனந்தபுரம், மங்களூருக்கு இயக்கப்படும் ரயில்கள் வியாழக்கிழமை ரத்து செய்யப்பட்டன.
பாலக்காடு, திருவனந்தபுரம் ஆகிய கோட்டங்களில் வெவ்வேறு இடங்களில் தண்டவாளத்தில் தண்ணீர் நிரம்பி வழிதல், நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கு காரணமாக, ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. 
அதன் விவரம்: சென்னை சென்ட்ரல் -திருவனந்தபுரம் மெயில் ரயில், சென்னை சென்ட்ரல் -மங்களூர் மெயில் ரயில், மங்களூர் சென்ட்ரல் -சென்னை சென்ட்ரல் மேற்கு கடற்கரை அதிவேக விரைவு ரயில், மங்களூர் -சென்னை சென்ட்ரல் அதிவேக விரைவு ரயில் உள்பட 11 ரயில்கள் வியாழக்கிழமை ரத்து செய்யப்பட்டன. இதுபோல, சில ரயில்கள் பகுதி ரத்தானது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com