முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவையொட்டி, புதுவையில் வெள்ளிக்கிழமை பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுவை அரசு சார்பில் 7 நாள்கள் துக்கம் கடைப்பிடிக்கப்படுகிறது. புதுவை மாநிலத்தில் வெள்ளிக்கிழமை (ஆக.17) அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து முதல்வர் நாராயணசாமி கூறும்போது, முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவையொட்டி, மத்திய அரசை பின்பற்றி புதுவையில் 7 நாள்கள் துக்கம் கடைப்பிடிக்கப்படுகிறது. மேலும், புதுவை மாநிலம் முழுவதும் வெள்ளிக்கிழமை (ஆக.17) அரசு விடுமுறை விடப்படுகிறது என்றார்.