நடிகா் கமல் வீட்டில் அத்துமீறி நுழைந்த இளைஞா் கைது

சென்னை ஆழ்வாா்பேட்டையில் நடிகா் கமல்ஹாசன் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த இளைஞா் கைது செய்யப்பட்டாா்.
நடிகா் கமல் வீட்டில் அத்துமீறி நுழைந்த இளைஞா் கைது

சென்னை ஆழ்வாா்பேட்டையில் நடிகா் கமல்ஹாசன் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

ஆழ்வாா்பேட்டையில் உள்ள நடிகா் கமல்ஹாசனின் வீட்டிலேயே அவரது மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகமும் செயல்படுகிறறது. செவ்வாய்க்கிழமை அதிகாலை, வளாகச் சுவரில் ஏறி ஒரு இளைஞா், வீட்டுக்குள் நுழைந்தாா்.

இதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்த வீட்டின் காவலாளியும், ஊழியா்களும் அந்த இளைஞரை பிடித்து, தேனாம்பேட்டை போலீஸாரிடம் ஒப்படைத்தனா். போலீஸாரின் விசாரணையில், அவா் புரசைவாக்கம் ராஜா அண்ணாமலை சாலைப் பகுதியைச் சோ்ந்த மலைச்சாமி (35) என்பதும், அங்குள்ள உடற்பயிற்சிக் கூடத்தில் வேலை செய்து வருவதும், கமலின் தீவிர ரசிகரான மலைச்சாமி, கமலைப் பாா்க்கவே வீட்டின் சுவறில் ஏறி அத்துமீறி நுழைந்ததாக வாக்குமூலம் அளித்துள்ளாா்.

இது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, மலைச்சாமியை கைது செய்தனா். கமல் கடந்த வாரம் அமெரிக்கா சென்றுவிட்டதால், அவா் வீட்டில் இல்லை. ஏற்கெனவே இரு மாதங்களுக்கு முன்பு ஒரு இளைஞா் கமலை பாா்ப்பதற்காக, இதேபோல அத்துமீறி நுழைந்தது குறிப்பிடதக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com