அசல் சான்றிதழ்களை பேராசிரியர்களிடம் உடனடியாக திருப்பி ஒப்படைக்க வேண்டும்: கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலை. எச்சரிக்கை

பேராசிரியர்களிடமிருந்து வாங்கி வைத்திருக்கும் அனைத்து அசல் சான்றிதழ்களையும் உடனடியாக கல்லூரிகள் திரும்பக் கொடுத்துவிட வேண்டும் என அனைத்துப்
அசல் சான்றிதழ்களை பேராசிரியர்களிடம் உடனடியாக திருப்பி ஒப்படைக்க வேண்டும்: கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலை. எச்சரிக்கை


பேராசிரியர்களிடமிருந்து வாங்கி வைத்திருக்கும் அனைத்து அசல் சான்றிதழ்களையும் உடனடியாக கல்லூரிகள் திரும்பக் கொடுத்துவிட வேண்டும் என அனைத்துப் பொறியியல் கல்லூரிகளுக்கும் அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள பெரும்பாலான தனியார் பொறியியல் கல்லூரிகள், அங்கு பணிபுரியும் பேராசிரியர்களிடம் பத்தாம் வகுப்பு முதல், பிஎச்.டி. வரையிலான அனைத்து அசல் சான்றிதழ்களையும் அவர்கள் வேலைக்குச் சேரும்போதே வாங்கி வைத்துக் கொள்வது வழக்கமான நடைமுறையாக இருந்து வருகிறது. இவ்வாறு பணியில் சேர்ந்த பேராசிரியர்கள், அந்தக் கல்லூரியிலிருந்து விலகும்போது அவர்களுடைய சான்றிதழ்களை நிர்வாகம் தர மறுப்பதும், குறிப்பிட்ட தொகையைச் செலுத்த கட்டாயப்படுத்துவதும் தொடர்கதையாகி வருகிறது. இதுதொடர்பாக அண்ணா பல்கலைக்கழகத்திடம் பல முறை புகார்கள் வந்தபோதும், எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.
இந்த நிலையில், சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் பணிபுரிந்த பேராசிரியருக்கு அண்ணா பல்கலைக்கழகத் துறைகளில் ஒன்றான குரோம்பேட்டை எம்.ஐ.டி.-இல் பணிவாய்ப்பு கிடைத்தது. எம்ஐடி-யில் பணியில் சேர்ந்து மூன்று மாதங்களான பிறகும்கூட அந்த தனியார் கல்லூரி அவருடைய அசல் சான்றிதழ்களைத் தர மறுத்துள்ளது. இதனால் மனமுடைந்த அந்தப் பேராசிரியர், தற்கொலை செய்துகொண்டார். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த விவகாரத்திலும் அண்ணா பல்கலைக்கழகம் பெரிய அளவில் நடவடிக்கை எடுக்கவில்லை எனப் புகார் எழுந்தது. இவ்வாறு அசல் சான்றிதழை தர மறுக்கும் கல்லூரிகளின் இணைப்பு அந்தஸ்தை பல்கலைக்கழகம் ரத்து செய்ய வேண்டும் என கல்வியாளர்கள் வலியுறுத்தினர்.
இந்தச் சூழலில், பொறியியல் கல்லூரிகளுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்து அண்ணா பல்கலைக்கழகம் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. இதுù தாடர்பாக அனைத்து பொறியியல் கல்லூரிகளின் தலைவர்கள் மற்றும் முதல்வர்களுக்கும் பல்கலைக்கழகப் பதிவாளர் (பொறுப்பு) குமார் அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்:-
தங்களுடைய அசல் சான்றிதழ்களை கல்லூரி நிர்வாகம் தர மறுப்பதாக ஏராளமான பேராசிரியர்களிடமிருந்து பல்கலைக்கழகத்துக்கு புகார்கள் வருகின்றன. எனவே, கல்லூரிகளில் பணிபுரியும் பேராசிரியர்களுக்கு, சான்றிதழ் சரிபார்த்தலுக்குப் பின்னர் அவர்களின் அனைத்து அசல் சான்றிதழ்களும் உடனடியாக திரும்பக் கொடுக்கப்பட்டுவிட்டதை கல்லூரி தலைவரும், முதல்வரும் உறுதிப்படுத்தவேண்டும். 
பணிபுரியும் பேராசிரியர்களின் அசல் சான்றிதழ்களை கல்லூரிகள் வாங்கி வைக்கக்கூடாது. இது தொடர்பான விவகாரத்தில், பல்கலைக்கழகம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிமன்றமும் ஏற்கெனவே அறிவுறுத்தியுள்ளது. இவ்வாறு அசல் சான்றிதழ்களை உடனடியாக திரும்பக் கொடுக்காத கல்லூரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். 
மேலும், இது தொடர்பாக அனைத்து கல்லூரிகளும் தவறாமல் வரும் 17-ஆம் தேதிக்குள் பல்கலைக்கழகத்துக்கு பதிலளிக்க வேண்டும் எனவும் இந்தச் சுற்றறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com