ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை திருப்திப்படுத்துவது என் வேலையல்ல, எனக்கு கட்சிதான் முக்கியம் என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.
தில்லியில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் 72வது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு திருநாவுக்கரசர் நேரில் பிறந்தநாள் வாழ்த்து கூறினார்.
அதன்பின்னர் திருநாவுக்கரசர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் யாரைத்தான் விமர்சிக்கவில்லை. அவரை திருப்திப்படுத்துவது என் வேலையல்ல, எனக்கு கட்சிதான் முக்கியம் என்று கூறினார்.
திருநாவுக்கரசருக்கு பதிலடி தரும் வகையில் பேசிய ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், திருநாவுக்கரசர் என் மீது வைத்திருக்கும் காதலை நினைக்கும்போது பெருமையாக உள்ளது. யார் தலைவராக வர வேண்டும் என்பதை காங்கிரஸ் தலைவர்தான் முடிவு செய்ய வேண்டும் என கூறினார்.