பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை ராஜரத்தினம் மைதானம் முன்பு ஊர்க்காவல் படை வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊர்க்காவல் படை வீரர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஊர்க்காவல் படை கூடுதல் இயக்குநருடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து, வீரர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். போராட்டத்தைக் கைவிடாவிட்டால் வீரர்களை கூண்டோடு பணிநீக்கம் செய்யப் போவதாக கூடுதல் இயக்குநர் மிரட்டுவதாகவும் அவர்கள் கூறினர்.