புயல் பாதித்த மாவட்டங்களில் ஒத்திவைக்கப்பட்ட அண்ணா பல்கலை. தேர்வு மறு தேதிகள் அறிவிப்பு

கஜா புயலால் அதிகம் பாதித்த 3 மாவட்டங்களில் ஒத்திவைக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழகத் தேர்வுகளுக்கான, மறு தேர்வுத் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.


கஜா புயலால் அதிகம் பாதித்த 3 மாவட்டங்களில் ஒத்திவைக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழகத் தேர்வுகளுக்கான, மறு தேர்வுத் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
கஜா புயல் பாதிப்பு காரணமாக திருவாரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் ஆகிய மூன்று மாவட்டங்களில் உள்ள பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகளுக்கான மறு தேதிகளை பல்கலைக்கழகம் இப்போது அறிவித்துள்ளது. 
அதன்படி, நவம்பர் 22 ஆம் தேதி நடைபெற இருந்த தேர்வுகள் டிசம்பர் 18 ஆம் தேதியன்றும், நவம்பர் 23 தேர்வுகள் டிசம்பர் 19 ஆம் தேதியும், நவம்பர் 24 ஆம் தேதி நடைபெற இருந்த தேர்வுகள் டிசம்பர் 20 ஆம் தேதியும் நடத்தப்பட உள்ளன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com