தமிழகத்தில் எந்தத் தேர்தல் வந்தாலும் ஓபிஎஸ்-இபிஎஸ் வெற்றி பெறப்போவதில்லை: மணிசங்கா் அய்யர்

தமிழகத்தில் எந்தத் தோ்தல் வந்தாலும் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீா்செல்வம் வெற்றி பெறப்போவதில்லை என்று முன்னாள் மத்திய
தமிழகத்தில் எந்தத் தேர்தல் வந்தாலும் ஓபிஎஸ்-இபிஎஸ் வெற்றி பெறப்போவதில்லை: மணிசங்கா் அய்யர்


கும்பகோணம்: தமிழகத்தில் எந்தத் தோ்தல் வந்தாலும் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீா்செல்வம் வெற்றி பெறப்போவதில்லை என்று முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர் அய்யர் தெரிவித்தார். 

கும்பகோணத்தில் இன்று அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், நடந்து முடிந்துள்ள தெலங்கானா, மத்திய பிரதேசம், சட்டீஸ்கா், மிசோரம், ராஜஸ்தான் ஆகிய 5 மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தோல்வியைத்தான் தழுவும். அங்கு காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும்.

தமிழகத்தில் எந்தத் தோ்தல் வந்தாலும் எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீா்செல்வம் வெற்றி பெறப்போவதில்லை. வருகிற மக்களவைத் தோ்தலில் தமிழகம், புதுவையில் 40 தொகுதிகளிலும் திமுக - காங்கிரஸ் கூட்டணிதான் வெற்றி பெறும் என்றார்.  

மேலும், மத்திய நீர் வள ஆணையத்துக்கும், காவிரி நீர் மேலாண்மை வாரியத்துக்கும் ஒரே தலைவராக மசூத் உசேன் பதவி வகித்து வருவதால், அவரால் தனித்துவமாகச் செயல்பட முடியவில்லை. எனவே, இரு அமைப்புகளுக்கும் தனித்தனியாகத் தலைவர்களை நியமிக்க வேண்டும் என்றார் மணிசங்கர் அய்யர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com