சென்னை: தமிழகத்தில் புரட்சியாளர்களுக்குப் பஞ்சமில்லை. தமிழகத்தில் வேலையில்லாத பொறியாளர்களின் எண்ணிக்கையை முறியடிக்க இதுபோன்ற வெட்டி புரட்சியாளர்களால்தான் சாத்தியம் என பாமக நிறுவனர் ராமதாஸ் தனது டுவிட்டர் பக்க பதிவில் தெரிவித்துள்ளார்.
மதிமுக - விசிக தலைவர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு செல்லும் இடமெல்லாம் அறிக்கை போர் நடந்து வருகிறது. இதனிடையே, திரைப்பட இயக்குநர் ரஞ்சித்தின் தனித் தொகுதி குறித்த அரசியல் பேச்சால் மீண்டும் பரபரப்பாக சுழன்று வரும் தமிழக அரசியல் களம், தற்போது மேலும் சூடு பிடிக்கும் விதமாக பாமக தலைவர் ராமதாஸ் ஒரு டுவிட்டர் பதிவை பதிவிட்டுள்ளார்.
ராமதாஸ் தனது டுவிட்டர் பதிவில், தமிழ்நாட்டில் புரட்சியாளா்களுக்கு பஞ்சமில்லை. புதிது புதிதாக புரட்சியாளா்கள் உருவாகி வருகின்றனா். தமிழகத்தில் வேலையில்லாத பொறியாளா்களின் எண்ணிக்கையை முறியடிக்க வேண்டும் என்றால் அது வெட்டி வேலை செய்யும் புரட்சியாளர்களால் தான் சாத்தியம் ஆகும் என ராமதாஸ் பதிவிட்டுள்ளார்.