தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பிற்காக ‘181’ இலவச தொலைபேசி எண் அறிமுகம்  

தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பிற்காக ‘181’ இலவச தொலைபேசி எண் திங்கள்கிழமை முதல் அறிமுகம் செய்யப்பட உள்ளது.  
தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பிற்காக ‘181’ இலவச தொலைபேசி எண் அறிமுகம்  

சென்னை: தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பிற்காக ‘181’ இலவச தொலைபேசி எண் திங்கள்கிழமை முதல் அறிமுகம் செய்யப்பட உள்ளது.  

நாடு முழுவதும் பெண்களின் பாதுகாப்பிற்காக ‘181’ என்னும் இலவச தொலைபேசி எண்ணை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. தில்லி, குஜராத் உள்ளிட்ட ஒரு சில மாநிலங்களில் மட்டும் இந்த சேவை தற்போது செயல்பாட்டில் உள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பிற்காக ‘181’ இலவச தொலைபேசி எண் திங்கள்கிழமை முதல் அறிமுகம் செய்யப்பட உள்ளது.  
 
குடும்ப வன்முறை, வரதட்சணை கொடுமை, பாலியல் துன்புறுத்தல், உடல்-மனநல பாதிப்புகள், பெண்களுக்காக அரசு செயல்படுத்தும் திட்டங்கள், பள்ளிகள், கல்லூரிகளில் வழங்கப்படும் ஸ்காலர்ஷிப்புகள் உள்பட குழந்தைகள் முதல் முதியோர் வரை பெண்களுக்கு தேவையான உதவி மற்றும் பாதுகாப்புக்கு இந்த எண்ணை அழைக்கும் வகையில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது

இந்த எண்ணிற்கு வரும் புகார்களை சேவை மையத்தை நிர்வகிக்கும் அதிகாரிகள் முறையாக பதிவு செய்து வைக்கும்படி உத்தர விடப்பட்டுள்ளது. குறிப்பிட்ட பிரச்சினைக்கு தீர்வு கண்டவுடன் குறிப்பிட்ட கால இடைவெளிக்குப் பிறகு மீண்டும் அந்த பெண்ணின் நிலை என்ன என்று ஆராய்ந்து பிரச்சினைகள் தீர்ந்து விட்டதை உறுதி செய்ய வேண்டும் என்று சமூக நலத்துறை உத்தரவிட்டுள்ளது.

இந்த சேவை மையத்துடன் காவல்துறை, மருத்துவம், சட்ட உதவிகள், கவுன்சிலிங் ஆகிய துறைகள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. பெண்களிடம் இருந்துவரும் அழைப்புகளின் அடிப்படையில் அவர்களுக்கு தேவையான உதவிகள் வழங்க இது ஏதுவாக இருக்கும். 

இந்த ‘181’ இலவச தொலைபேசி எண் சேவையை தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை திங்களன்று துவங்கி வைக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com