சென்னை: அதிமுக மாவட்ட செயலர்கள் கூட்டம் நாளை மறுநாள் செவ்வாய்கிழமை (டிச. 11) நடைபெறவுள்ளதாக அதிமுக தலைமை அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக அதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் - இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி தலைமையில் நாளை மறுநாள் செவ்வாய்கிழமை (டிச.11) அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் அமைச்சர்கள், மாவட்ட செயலர்கள், தலைமை கழக நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர்.