தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்களை அவதூறாகப் பேசியதாக, முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா மீது, பெரம்பலூர் போலீஸார் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பெரம்பலூர் பொதுக் கூட்டத்தில் தமிழக முதல்வரையும், அமைச்சர்களையும் அவதூறாக முன்னாள் மத்திய அமைச்சர் ராசா பேசியதாகக் கூறி அவர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று பெரம்பலூர் காவல் நிலையத்தில் அதிமுகவைச் சேர்ந்த வழக்குரைஞர் துரை.பெரியசாமி வெள்ளிக்கிழமை இரவு புகார் செய்தார்.
இதன் பேரில், முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா மீது பொதுமக்களின் அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், அவதூறாக பேசுதல், அவதூறாகப் பேசி மனதை புண்படுத்துதல், கொலைமிரட்டல் விடுத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் பெரம்பலூர் காவல் ஆய்வாளர் சுகந்தி வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார்.