தென் கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய இந்தியப் பெருங்கடல் பகுதியில் ஒரு காற்றழுத்தத் தாழ்வு நிலை தற்போது நீடிக்கிறது.
இது அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக வலுவடைந்து, இந்தியப் பெருங்கடல் மற்றும் அதையொட்டிய வங்கக்கடலின் மத்தியப்பகுதியில் காணப்படும். இது மேலும் வலுவடைந்து புயலாக மாறுவதற்கு வாய்ப்பு உள்ளது.
அப்படி புயலாக மாறினாலும் எந்த திசையில் நகரும் என்பதை தற்போது கணித்துச் சொல்ல முடியாது. இரண்டு நாள்களுக்கு பிறகு தான் தெரிய வரும். அப்போது, தமிழகத்துக்கு மழை வாய்ப்பு குறித்த விவரம் தெரியவரும் என்று வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.