திமுக-காங்கிரஸ் கூட்டணி: தமிழிசை கண்டனம்

தமிழக மக்களுக்கு திமுக-காங்கிரஸ் கூட்டணி ஒன்றும் செய்யவில்லை என்று பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். 
திமுக-காங்கிரஸ் கூட்டணி: தமிழிசை கண்டனம்


தமிழக மக்களுக்கு திமுக-காங்கிரஸ் கூட்டணி ஒன்றும் செய்யவில்லை என்று பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். 
இதுகுறித்து, அவர் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:
காங்கிரஸ் கட்சியும், திமுகவும் ஏதோ கூட்டணி அமைத்து விட்டது போலவும், சோனியாவைச் சந்தித்தது மிகப் பெரிய மாற்றம் போலவும் முன் நிறுத்துகிறார்கள். 
இது தமிழக மக்களை ஏமாற்றுவதாகும். இந்த கூட்டணி கடந்த 10 ஆண்டுகளாக இருந்த கூட்டணிதான்.
மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இருந்தபோதும் தமிழக மக்களுக்கு ஒன்றும் செய்யாத கூட்டணிதான் என்பது மக்களுக்கு நன்றாகத் தெரியும். 
இந்திய அளவில் பலவீனமானவர்களை வைத்துக் கொண்டு பலமான கூட்டணியைக் கொண்ட கூட்டத்தை நடத்தி விட்டதைப் போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள். ஆனால், தமிழகத்திலேயே கூட திமுக தலைமையிலான இந்த கூட்டணி வலுவிழந்து வருகிறது. 
அகில இந்திய அளவில் உருவான கூட்டணி என்பது அது மெகா கூட்டணி அல்ல. மெகா ஊழல் கூட்டணி. இந்தக் கூட்டணி தாமரை மறுபடியும் மலர்வதற்கே உதவும் கூட்டணியாக அமையும் என்று அந்த அறிக்கையில் தமிழிசை சௌந்தரராஜன் குறிப்பிட்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com