பாஜக தனது செல்வாக்கை இழந்துள்ளதை இந்த தேர்தல் முடிவுகள் காட்டுவதாக நடிகர் ரஜினிகாந்த், செவ்வாய்கிழமை தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை செவ்வாய்கிழமை நடைபெற்று வருகிறது. இதில் சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் பெரும்பான்மையை எட்டியுள்ளது. அதுபோன்று ராஜஸ்தான் மற்றும் மத்தியபிரதேசத்தில் இழுபறி நீடித்து வருகிறது.
இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் ரஜினிகாந்த் கூறியதாவது:
5 மாநில தேர்தல் முடிவுகள் பாஜக-வுக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இந்த தேர்தல் முடிவுகள் பாஜக செல்வாக்கை இழந்துள்ளதை காட்டுகிறது என்று தெரிவித்தார்.