சறுக்கலை சரி செய்து 2019 மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றிபெறும் என பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசியதாவது,
வெற்றிகரமான தோல்வி என நான் கூறியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. பாஜகவின் வாக்கு சதவீதம் குறையவில்லை, இடங்களின் எண்ணிக்கை தான் குறைந்துள்ளது, அது தோல்வி இல்லை.
5 மாநில தேர்தலில் ஏற்பட்ட சறுக்கலை சரி செய்து 2019 மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றிபெறும். மோடி அலை ஓயவில்லை, ராகுல் அலை என்பது இல்லவே இல்லை, ராகுல் அலை என செயற்கையாக ஒன்றினை உருவாக்கி உள்ளனர் என்றார்.