ஜெயலலிதா மரணம்: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு விசாரணை ஆணையம் அழைப்பாணை
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக டிசம்பர் 20-ஆம் தேதி ஆஜராகுமாறு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு விசாரணை ஆணையம் அழைப்பாணை அனுப்பி உள்ளது.
ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் தனிநபர் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்துள்ளது. இந்த ஆணையத்தில் ஜெயலலிதா உறவினர்கள், அவரது உதவியாளர்கள், சசிகலாவின் உறவினர்கள், முன்னாள் தலைமைச் செயலர்கள், அரசு மருத்துவர்கள், அப்பல்லோ மருத்துவர்கள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர்.
சசிகலாவுக்கு எதிராக விசாரணை ஆணையத்தில் பிரமாணப் பத்திரம், சாட்சியம் அளித்தவர்களிடம் அவரது வழக்குரைஞர்கள் குறுக்கு விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக டிசம்பர் 20-ஆம் தேதி ஆஜராகுமாறு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு விசாரணை ஆணையம் அழைப்பாணை அனுப்பி உள்ளது.
முன்னதாக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் முன்னாள் அமைச்சர் பொன்னையன் இருவரும் 18ஆம் தேதி ஆஜராகவும் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.