பெங்களூரு சிறையில் சசிகலாவிடம் வருமான வரித்துறை இன்று விசாரணை

பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவிடம் வருமானவரித்துறை அதிகாரிகள் இன்றும் நாளையும் விசாரணை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பெங்களூரு சிறையில் சசிகலாவிடம் வருமான வரித்துறை இன்று விசாரணை

பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவிடம் வருமானவரித்துறை அதிகாரிகள் இன்றும் நாளையும் விசாரணை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்தாண்டு சசிகலாவுக்கு சொந்தமான 180 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியிருந்தனர். இந்நிலையில் சோதனையின்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் சொத்துக்கள் தொடர்பாக சசிகலாவிடம் வருமானவரித்துறையினர் இன்றும் நாளையும் விசாரணை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் தண்டனை பெற்று சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com