குட்கா ஊழல்: அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சிபிஐ சம்மன்

குட்கா ஊழல் தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் பிவி ரமணா ஆகியோர் நாளை (சனிக்கிழமை) ஆஜராகுமாறு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. 
குட்கா ஊழல்: அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சிபிஐ சம்மன்


குட்கா ஊழல் தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் பிவி ரமணா ஆகியோர் நாளை (சனிக்கிழமை) ஆஜராகுமாறு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. 

குட்கா ஊழல் வழக்குத் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள், சுகாதாரத்துறை அமைச்சர், காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட 35 இடங்களில் கடந்த செப்டம்பர் 5-ஆம் தேதி சோதனை செய்து, முக்கிய ஆவணங்களைப் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக சம்பந்தப்பட்ட கிடங்கு உரிமையாளர்கள் மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா உள்பட பலரை சிபிஐ அதிகாரிகள் அடுத்ததடுத்து கைது செய்தனர்.

இந்நிலையில் இவ் வழக்கு விசாரணைக்கு நாளை ஆஜராகுமாறு சிபிஐ அதிகாரிகள், அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் முன்னாள் அமைச்சர் பிவி ரமணா ஆகியோருக்கு அழைப்பாணை வழங்கியுள்ளனர். 

முன்னதாக, அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் சரவணனுக்கு அழைப்பாணை வழங்கினர். இதை ஏற்று கடந்த வெள்ளிக்கிழமை ஆஜரான சரவணனிடம், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் அதிகாரிகள் ஏழரை மணி நேரம் விசாரணை செய்தனர். இதையடுத்து, இவ்விசாரணைக்கு சரவணன் செவ்வாய்க்கிழமை மீண்டும் சிபிஐ அதிகாரிகள் முன் ஆஜரானார். அவரிடம் சிபிஐ அதிகாரிகள் பல கட்டங்களாக விசாரணை நடத்தினர். விசாரணையில் சரவணன் அளித்த பதில்களை சிபிஐ அதிகாரிகள் பதிவு செய்தனர். காலை 10 மணிக்கு தொடங்கிய இந்த விசாரணை மாலைவரை நடைபெற்றது.

இந்த நிலையில், அமைச்சர் விஜயபாஸ்கருக்கு அழைப்பாணை அனுப்பியிருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com