எந்த ஒரு பிரச்சனையாக இருந்தாலும் போராடி உரிமைகளை பெற்றுத்தரும் ஒரே கட்சி அதிமுகதான் என்று தமிழக கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரித்தார்.
இதுகுறித்து இன்று அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், கஜா புயலால் மிகப்பெரிய பேரிடர் ஏற்பட்டுள்ளது. மின் விநியோகம் சீர் செய்யப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு வங்கிகள் மூலம் நிவாரணம் வழங்குவதில் சிக்கல் உள்ளதால், நிவாரண தொகையை வங்கி கணக்குகளில் மொபைல் பேங்கிங் மூலமாகவும் வழங்குவதற்கான முயற்சிகளை அரசு மேற்கொண்டுள்ளது.
காழ்ப்புணர்ச்சி காரணமாகவே சாலை மறியல் நடக்கிறது என்றவர் மத்திய அரசு நல்ல நிவாரண நிதியை வழங்குவார்கள் என்றார். மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்ந்து வேகமாக நடைபெற்று வருகிறது என்றார்.
மேலும், எந்த ஒரு பிரச்னையாக இருந்தாலும் போராடி உரிமைகளை பெற்றுத்தரும் ஒரே கட்சி அதிமுகதான். செந்தில்பாலாஜி கட்சி மாறியதை பத்தோடு பதினொன்றாகத்தான் பார்க்கிறேன் என்றவர் திராவிடக் கட்சிகளால் தமிழகத்தில் வளர்ச்சி இல்லை என பாஜக கூறுவது அக்கப்போரான குற்றச்சாட்டு என்றார் அமைச்சர் ஓ.எஸ்.மணியன்.