எண்ணூர், கடலூர், நாகை துறைமுகங்களில் 3ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலவிவந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. தற்போது இது சென்னைக்கு அருகே 690 கி.மீ தொலைவில் நிலைக்கொண்டுள்ளது.
இது அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக வலுப்பெற்று ஆந்திர மாநிலம் ஓங்கோல் - காக்கிநாடா இடையே 17ஆம் தேதி பிற்பகலில் கரையை கடக்கும். இதன்காரணமாக இன்றும், நாளையும் வட தமிழக கடலோர பகுதிகளில் ஒருசில இடங்களில் மிதமான மழையும், ஓரிரு இடங்களில் கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது.
எனவே மீனவர்கள் 16, 17, 18 தேதிகளில் தென்மேற்கு மற்றும் மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம். 45 முதல் 55 கி.மீ. வரை தரைக்காற்று பலமாக வீசும். சென்னையில் தரைக்காற்று பலமாக வீசும். இவ்வாறு அவர் கூறினார். இந்நிலையில் வங்கக்கடலில் புதிய புயல் உருவாகவிருப்பதால்
எண்ணூர், கடலூர், நாகை துறைமுகங்களில் 3ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.