நாகை, காரைக்கால், புதுச்சேரி துறைமுகங்களில் 3-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்

வரும் 24 மணி நேரத்தில் புயலாக மாறி வடக்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து திங்கள்கிழமை தீவிரப் புயலாக மாறி, ஆந்திர கடற்கரைப் பகுதியில்
நாகை, காரைக்கால், புதுச்சேரி துறைமுகங்களில் 3-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்

தென்கிழக்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றறழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்று, திங்கள்கிழமை (டிச.17) கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில், நாகை, புதுச்சேரி மற்றும் காரைக்கால் துறைமுகங்களில் 3-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. 

தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமானது மணிக்கு சுமார் 13 கி. மீ. வேகத்தில் மேற்கு, வடமேற்கு திசைகளில் நகர்ந்து, சென்னைக்கு 690 கி.மீ. தொலைவிலும், ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டினத்துக்கு 890 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.

இது வரும் 24 மணி நேரத்தில் புயலாக மாறி வடக்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து திங்கள்கிழமை தீவிரப் புயலாக மாறி, ஆந்திர கடற்கரைப் பகுதியில் ஓங்கோலுக்கும் - காக்கிநாடாவுக்கும் இடையே பிற்பகலில் கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், நாகை துறைமுக அலுவலகத்தில் இன்று புயல் முன்னறிவிப்புக் கொடியான 3-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

இதேபோன்று, புதுச்சேரி, காரைக்கால் துறைமுகங்களிலும் 3-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com