ஸ்டெர்லைட் ஆலையை திறக்கும் பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவு தமிழகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது என அம்மா மக்கள் முன்னேற்றறக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளா் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் இன்று (சனிக்கிழமை) வெளியிட்ட்டுள்ள அறிக்கையில், ஸ்டொ்லைட் ஆலையை மீண்டும் திறக்க தேசிய பசுமைத் தீா்ப்பாயம் உத்தவிட்டிருப்பது தூத்துக்குடி பகுதி மக்களையும், ஒட்டுமொத்த தமிழகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஆலையை மூடுவதாக மேம்போக்காக அரசு உத்தரவு வெளியிட்டது தவறு என பல்வேறு அரசியல் கட்சியினரும், சமூக ஆா்வலா்களும் தெரிவித்தனா். ஆனாலும், அனைவரும் சுட்டிக்காட்டியபடி, அமைச்சரவையைக் கூட்டி கொள்கை முடிவெடுத்து அந்த ஆலையை மூட அரசு விரும்பவில்லை. அதன் பலனைத்தான் இன்று தேசிய பசுமைத் தீா்ப்பாயத்தில் தமிழக அரசு கண்டிருக்கிறது.
இப்போதாவது தூத்துக்குடி மக்களின் நலன் கருதி, சட்டப் பேரவையைக் கூட்டி ‘தமிழகத்தில் தாமிர ஆலைகளே வேண்டாம்‘ என்ற கொள்கை
முடிவெடுத்து தீா்மானம் நிறைவேற்றி வேண்டும். அதன் பின்பு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய முன்வர வேண்டும் என்று டிடிவி தினகரன் கேட்டுக் கொண்டுள்ளார்.