மக்களோடுதான் அதிமுக கூட்டணி:  எடப்பாடி கே.பழனிசாமி

வரும் மக்களவைத் தேர்தலில் மக்களோடுதான் அதிமுக கூட்டணி அமைக்கும் என்று  தமிழக முதல்வரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி கே.பழனிசாமி கூறினார்.
மக்களோடுதான் அதிமுக கூட்டணி:  எடப்பாடி கே.பழனிசாமி

வரும் மக்களவைத் தேர்தலில் மக்களோடுதான் அதிமுக கூட்டணி அமைக்கும் என்று  தமிழக முதல்வரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி கே.பழனிசாமி கூறினார்.
சேலம் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதல்வர் அதிமுகவினரின் வரவேற்பை ஏற்று பேசியது:-
வரும் மக்களவைத் தேர்தலில் அதிமுக சார்பில் அதிக மக்களவை உறுப்பினர்கள் வெற்றி பெற்றால்தான் அதிகத் திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்த  முடியும். ,அதிக நிதியையும் மத்திய அரசிடம் இருந்து பெற முடியும்.
 பிற கட்சிகளுடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூட்டணி பேசுகிறார். அதிமுகவைப் பொருத்தவரை மக்களுடன்தான் கூட்டணி.  எத்தனை கட்சிகள் போட்டியிட்டாலும் அதிமுகவே வெற்றி பெறும்.
ஆட்சிகளை ஒப்பிடுங்கள்: அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது,  தமிழகத்துக்கு  பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தினார்.
அதிமுக பற்றியே எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசிவருகிறார். அதிமுகவைப் பற்றி பேசினால்தான் அவருக்கு தூக்கமே வரும்.
 சட்டப்பேரவையில் மானியக்கோரிக்கை நடைபெறும்போது,  அதிமுக  ஆட்சி நிலைக்குமா என்று மு.க.ஸ்டாலின் கேட்டார்.  மக்களின் ஆதரவு இருந்தால் எத்தனை ஆண்டுகளானாலும் இந்த ஆட்சி நிலைக்கும். இது மக்களின் ஆட்சி. மக்களின் தேவைகளை நிறைவேற்றுகின்ற அரசு. விவசாயிகளும் ,பொதுமக்களும் நினைப்பதைப் பிரதிபலிக்கின்ற அரசாக அதிமுக அரசு உள்ளது. 
வழக்குகளை எதிர்கொள்வோம்:அதிமுக அமைச்சர்கள் மீது பொய்யான வழக்குகள் போட்டு, மக்களை எப்படியாவது திசை திருப்பவேண்டும் என்று சிலர் நினைக்கின்றனர்.  இதற்காக திட்டங்களை வகுக்க ஆரம்பித்துவிட்டார்கள். எத்தனை வழக்குகள் போட்டாலும்,அத்தனையையும் எதிர்கொள்வோம்.  என் மீதான வழக்குக்கு,  உச்சநீதிமன்றத்தில் தடையாகிவிட்டது.
காற்றிலே ஊழல் செய்த கட்சி திமுக.   இந்தியா தலைகுனிவதற்கு காரணமே திமுகதான்.ஆனால் தங்களுடைய ஆட்சியிலே எதுவுமே நடக்கவில்லை என்ற பொய்யான தகவலை  மக்களிடம் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.
முதல்வரை சந்திக்க முன்அனுமதி தேவையில்லை: இந்தியாவிலேயே முன்அனுமதி இல்லாமல் சந்திக்கக் கூடிய ஒரே முதல்வராக நான் இருக்கிறேன். கல்வி, மருத்துவத் துறைகளில் தமிழகம் மிகப் பெரிய சாதனைகளை ஏற்படுத்திவருகிறது.
வரக் கூடிய  அத்தனை கோப்புகளிலும் கையெழுத்திட்டுள்ளேன்.எந்த நேரமும் தமிழக முதல்வரை பார்க்கக்கூடிய ஒரே கட்சி,அதிமுக கட்சிதான். 
அனைத்துத் துறைகளிலும் முதன்மையாக இருக்கக் கூடிய அளவுக்கு தமிழக அரசு இரவு,பகல் பாராமல் பாடுபட்டு, அத்தனை மக்களுக்கும் நன்மையான திட்டங்களை வழங்குகிறது என்றார்.

திட்டமிட்டு பொய் பிரசாரம்

அதிமுக ஆட்சி மீது திட்டமிட்டு ஊழல் குற்றச்சாட்டுகள் தெரிவித்து பொய் பிரசாரம் செய்து வருகின்றனர் என்று தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.
சேலத்தை அடுத்த வீரகனூர் பேரூராட்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அரசு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
முதல்வர் ஜெயலலிதா மறைந்தவுடன்,  அதிமுக ஆட்சி கவிழும்,  கட்சி  உடையும் என்று எதிர்க்கட்சியினர் எதிர்பார்த்தனர்.  ஆனால் எதுவும் நடக்கவில்லை.  தற்போது ஊழல் குற்றச்சாட்டு என்ற புதிய ஆயுதத்தைக் கையில் எடுத்துக் கொண்டு நீதிமன்றம் செல்வதாகக் கூறுகின்றனர். இந்த ஆட்சி மீது வேண்டும் என்றே திட்டமிட்டு ஊழல் குற்றச்சாட்டு தெரிவித்து பொய் பிரசாரம் செய்து வருகின்றனர்.
 உள்ளாட்சித் துறை அமைச்சராக மு.க.ஸ்டாலின் இருந்தபோது எப்படி ஒப்பந்தம் விடப்பட்டதோ அப்படித்தான் தற்போது ஒப்பந்தம் விடப்படுகிறது.  அதிமுகவால் எம்எல்ஏ,  அமைச்சர் பதவியை அனுபவித்த செந்தில்பாலாஜி இயக்கத்துக்கு துரோகம் செய்துவிட்டு வெளியே சென்றவர். அவர் நன்றி மறந்தவர் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com