பிப்.15 முதல் பிளஸ் 1 வகுப்புக்கு செய்முறைத் தேர்வு நடத்த உத்தரவு

பிளஸ் 1 பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பிப். 15 முதல் பிப். 26-ஆம் தேதிக்குள் செய்முறை தேர்வை நடத்த வேண்டும் என பள்ளிகளுக்கு தேர்வுத் துறை உத்தரவிட்டுள்ளது.

பிளஸ் 1 பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பிப். 15 முதல் பிப். 26-ஆம் தேதிக்குள் செய்முறை தேர்வை நடத்த வேண்டும் என பள்ளிகளுக்கு தேர்வுத் துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழக பாடத்திட்ட மாணவர்கள், நுழைவு தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெறும் வகையில் இந்தாண்டு முதல், பிளஸ் 1 வகுப்புக்கும் பொது தேர்வு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் 200 மதிப்பெண்களுக்கு நடத்த வேண்டிய தேர்வு, 100 மதிப்பெண்களுக்கு மாற்றப்பட்டுள்ளது. 
பிளஸ் 1 வகுப்புக்கு அக மதிப் பெண் வழங்க தனியாக விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. ஆனால், பள்ளி ஆய்வகங்களில் மாணவர்களுக்கு செய்முறை தேர்வு நடத்தி மதிப்பெண் வழங்குவது குறித்து எந்த வழிகாட்டுதலும் வழங்கப்படாமல் இருந்தது. இந்தநிலையில் பிளஸ் 1 செய்முறை தேர்வுக்கான சுற்றறிக்கை பள்ளிகளுக்கு தேர்வுத்துறை அனுப்பியுள்ளது. 
அதில் கூறியிருப்பதாவது:
பிளஸ் 1 வகுப்பு மாணவர்களுக்கு பிப். 14-ஆம் தேதி முதல், 26-ஆம் தேதிக்குள் அனைத்து பள்ளிகளும், செய்முறை தேர்வை நடத்தி முடிக்க வேண்டும்; அகமதிப்பீடுக்கு, அதே பள்ளி ஆசிரியரும், செய்முறை தேர்வு கண்காணிப்புக்கு, மற்ற பள்ளி ஆசிரியரையும் பணியில் அமர்த்த, முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது பிளஸ் 1 வகுப்புக்கு ஏற்கெனவே இருக்கும் பாடத்திட்டத்தின்படி செய்முறை தேர்வை நடத்த வேண்டும். 
பிளஸ் 2 வகுப்பில் பின்பற்றப்படுவது போன்று செய்முறை மதிப்பீடு வழங்க வேண்டும். தேர்வுகளில், எந்த முறைகேடுக்கும் இடம் தரக்கூடாது; மாணவர்களின் மதிப்பெண்களை ரகசியமாக பதிவுசெய்து, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளிடம் வழங்க வேண்டும். முதன்மை கல்வி அதிகாரிகள், ஆன்லைனில், தேர்வுத்துறைக்கு மதிப்பெண் பட்டியலை அனுப்ப வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது. பிளஸ் 1 வகுப்புக்கு அறிவியல் பாடங்களுக்கு 30 மதிப்பெண்களுக்கு செய்முறைத் தேர்வு நடைபெறவுள்ளது. பிற பாடங்களுக்கு 10 மதிப்பெண்களுக்கு அகமதிப்பீட்டுத் தேர்வு நடைபெறும். 
பிளஸ் 2 வகுப்புக்கு நாளை தொடக்கம்: பிளஸ் 2 பொதுத் தேர்வு வரும் மார்ச் 1-ஆம் தேதி துவங்குகிறது. 
அதனையொட்டி செய்முறை தேர்வுகள் பிப்.2-ஆம் தேதி முதல் பிப்.8-ஆம் தேதி வரையிலும், இரண்டாம் கட்டமாக பிப்ரவரி 9-ஆம் தேதி முதல் பிப்.14-ஆம் தேதி வரையிலும் இரண்டு கட்டங்களாக செய்முறைத் தேர்வுகள் நடைபெறும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com