தமிழகம் முழுவதும் 4 மணி நேரங்களுக்கு ரயில்வே டிக்கெட் கௌன்டர்கள் மற்றும் இணையதளம் ஞாயிற்றுக்கிழமை செயல்படாது என்று தெற்கு ரயில்வே சனிக்கிழமை அறிவித்துள்ளது.
பேரிடர் மேலாண்மை மற்றும் மீட்பு நடவடிக்கைகள் தொடர்பான பணிகளின் காரணமாக டிக்கெட் கௌன்டர்கள் மற்றும் இணையதளத்தின் செயல்பாடு நிறுத்தி வைக்கப்படுகிறது.
ஒவ்வொரு வருடமும் இவற்றில் புதிய திட்டங்களை செயல்படுத்துவது, தொழில்நுட்ப ரீதியிலான மாற்றங்களை ஏற்படுத்துவது உள்ளிட்ட சேவை மேம்பாடு பணிகளின் காரணமாக இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது.
எனவே தெற்கு ரயில்வே, தென்மேற்கு ரயில்வே, தென் மத்திய ரயில்வே ஆகியவற்றின் கீழ் இயங்கும் (http://www.sr.indianrailways.gov.in ) என்ற இணையதளம் மதியம் 2.05 மணி முதல் 3.45 மணி வரையும், இரவு 11.30 மணி முதல் 1.45 வரையிலான செயல்பாடு ரத்து செய்யப்படுகிறது. இந்த நேரத்தில் டிக்கெட் கௌன்டர்களும் செயல்படாது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.