பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பு (ஜாக்டோ - ஜியோ) சார்பில் பிப்ரவரி 21-ம் தேதி முதல் தொடர் மறியல் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக சனிக்கிழமை அறிவித்துள்ளது.
பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், அனைவருக்கும் பயன்தரக்கூடிய பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 8-ஆவது ஊதியக் குழுவின் 21 மாத ஊதிய நிலுவைத் தொகையை வழங்க வேண்டும். 7-ஆவது மற்றும் 8-ஆவது ஊதியக் குழுவில் உள்ள முரண்பாடுகளைக் களைய வேண்டும்.
போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீதான பழிவாங்கும் நடவடிக்கைகளை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பிப்ரவரி 21-ம் தேதி முதல் இந்த தொடர் மறியல் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.