இந்திய - இலங்கை கடற்பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்வது குறித்து இரு நாட்டு கடற்படை அதிகாரிகள் கொழும்புவில் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினர்.
இந்திய - இலங்கை கடற்பகுதியில் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்வது குறித்து வியாழக்கிழமை கொழும்புவில் இரு நாட்டு கடற்படை அதிகாரிகள் கலந்துகொண்ட 7-ஆவது ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் இரு நாட்டு கடற்படை அதிகாரிகள் கலந்துகொண்டனர். கூட்டத்தின்போது இரு நாடுகளுக்கும் இடையிலான கடற் பாதுகாப்பு, உறவுகளை மேம்படுத்தல் போன்ற விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. சர்வதேச கடல் எல்லையில் ஒன்றிணைந்த செயல்பாடு ஆகியவற்றின் மூலம் பிராந்தியத்தில் செயல்திறன்மிக்க கடல்வழி பாதுகாப்பை நிலைநாட்டுவதற்காக இருதரப்பினரும் பரஸ்பரம் இணைந்து செயல்பட வேண்டிய அவசியம் தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது.