எம்எல்ஏ-வுக்கு தொடர்பா? போலீஸார் விசாரணை

சென்னை அருகே ரௌடிகள் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட சம்பவத்தில் முக்கிய அரசியல் கட்சியைச் சேர்ந்த ஒரு சட்டப் பேரவை உறுப்பினருக்கும் தொடர்பு இருப்பதாக போலீஸாரின் முதல்கட்ட

சென்னை அருகே ரௌடிகள் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட சம்பவத்தில் முக்கிய அரசியல் கட்சியைச் சேர்ந்த ஒரு சட்டப் பேரவை உறுப்பினருக்கும் தொடர்பு இருப்பதாக போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
பிறந்த நாள் கொண்டாட்டம் நடத்தப்பட்ட வாகன பழுது பார்க்கும் மையம் அமைந்துள்ள இடம் அரசுக்கு சொந்தமானது என்பதும், அந்த இடத்தில், சட்டப் பேரவை உறுப்பினர் ஒருவரின் ஏற்பாட்டின் பேரிலேயே ரெüடி பினுவின் பிறந்த நாள் கொண்டாட்டம் நடத்தப்பட்டதும் போலீஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. அந்த சட்டப் பேரவை உறுப்பினருக்கு அரசியல் ரீதியாக சில உதவிகளை பினு செய்து கொடுத்ததாக கூறப்படுகிறது. அதற்கு நன்றி தெரிவிக்கவே அந்த பிறந்த நாள் கொண்டாட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவல் சேகரித்துள்ள போலீஸார், தொடர்புடைய சட்டப் பேரவை உறுப்பினரை விசாரணை வளையத்தில் கொண்டு வரவும் நடவடிக்கை எடுத்துள்ளனர். அத்துடன் வாகன மையத்தின் உரிமையாளர் வேலுவும் தீவிரமாக தேடப்பட்டு வருகிறார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com