சென்னை: சென்னை ஐசிஎஃப் பகுதியில் ரயில்வே தொழிற்சங்க பொதுச் செயலர் புதியவன் என்பவரை அடையாளம் தெரியாத நபர்கள் வீடு புகுந்து வெட்டிக் கொன்றுள்ளனர்.
வில்லிவாக்கம் பகுதியில் உள்ள புதியவன் வீட்டுக்குள் இன்று காலை அதிரடியாக நுழைந்த அடையாளம் தெரியாத நபர்கள், அவரை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு தப்பியோடினர்.
இது குறித்து சென்னை ஐசிஎப் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
ரயில்வே தொழிற்சங்கத்தின் நிர்வாகியாக செயல்பட்ட புதியவன் வீடு புகுந்து வெட்டிக் கொலை செய்யப்பட்டது அப்பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விரைந்து வந்த காவல்துறையினர், புதியவனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். புதியவனின் வீட்டருகே இருக்கும் சிசிடிவி கேமரா காட்சிகளையும் காவல்துறையினர் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள். அடையாளம் தெரியாத குற்றவாளிகளைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.